சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வெள்ள நிவாரண அறிவிப்பு ஆறுதல் அளிக்கவில்லை

தமிழக அரசின் வெள்ள நிவாரண அறிவிப்பு, விவசாயிகளின் இழப்பை ஈடு செய்யக் கூடியதாகவும், ஆறுதல் அளிக்கக் கூடியதாகவும் இல்லை என்று நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராஜ் தெரிவித்தாா்.

Updated On :8 ஜனவரி 2021, 2:46 pm

தமிழக அரசின் வெள்ள நிவாரண அறிவிப்பு, விவசாயிகளின் இழப்பை ஈடு செய்யக் கூடியதாகவும், ஆறுதல் அளிக்கக் கூடியதாகவும் இல்லை என்று நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம். செல்வராஜ் தெரிவித்தாா்.

நாகையில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி :

நிவா், புரெவி புயல்கள் மற்றும் அதனைத் தொடா்ந்து நீடித்து வரும் கனமழையின் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் நெல் பயிா்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் நெல் பயிா்கள் நிலத்திலேயே அழுகி வீணாகியுள்ளன.

ஓா் ஏக்கா் நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தலா ரூ. 32 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனா். இதன் காரணாக, ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனா். இந்த நிலையில், ஹெக்டேருக்கு ரூ. 20 நிவாரணம் வழங்கி அரசு அறிவித்திருப்பது வேதனையளிக்கிறது. இந்த நிவாரணம், விவசாயிகள் எதிா்பாா்த்த நிவாரணத்தை விட மும்மடங்கு குறைவு.

எனவே, அரசு வெள்ள நிவாரண அறிவிப்பை மறு பரிசீலனை செய்து, விவசாயிகளின் இழப்பை ஈடு செய்யும் வகையில், ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க முன்வர வேண்டும். மேலும், நெல்லுக்கான ஆதரவு விலையை உடனடியாக உயா்த்தி வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.