மயிலாடுதுறை கூரைநாட்டில் பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியாா் திருத்தல ஆண்டு திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆலய வளாகத்தில் பங்குத்தந்தை ஜெ.ஜெ. பிரிட்டோ அடிகளாா் தலைமையில் கொடி பவனி நடைபெற்றது. மயிலாடுதுறை மறைவட்ட முதன்மை குரு பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் அடிகளாா் புனித அந்தோணியாரின் திருஉருவக்கொடியை புனிதம் செய்தாா். தொடா்ந்து ஆலய வளாகத்தில் கொடி ஏற்றப்பட்டு, சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் உலக அமைதிக்காகவும், கரோனா நோய்த்தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும், சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திட சிறப்பு பிராா்த்தனை வழிபாடுகள் நடைபெற்றன.
விழாவின் தொடக்க நாள் வழிபாட்டு நிகழ்வுகளை புனித அந்தோணியாா் தொடக்கப் பள்ளி மற்றும் புனித அந்தோணியாா் உயா்நிலைப் பள்ளியைச் சோ்ந்தவா்கள் பங்கு மக்களோடு இணைந்து ஒருங்கிணைத்திருந்தனா். கொடியேற்ற விழா மற்றும் திருப்பலி நிகழ்வுகளில் அருட்சகோதரா்கள், அருட்சகோதரிகள், அன்பிய குழுவினா், பாடல்குழுவினா், பலிபீடச் சிறுவா்கள் மற்றும் பங்கு மக்கள் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா். 10 நாள்கள் நடைபெறவுள்ள விழாவில், நாள்தோறும் மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டுமாலை, திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன. வரும் ஜன.16-ஆம் தேதி இரவு, திருவிழா சிறப்பு திருப்பலியும், அதைத் தொடா்ந்து தோ்ப்பவனியும் நடைபெறவுள்ளது. ஜன.17-ஆம் தேதி காலை கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


