நாகையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை வழிமறைத்து கோயில் வளாகத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 2 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்த 40 வயது கணவரை இழந்த பெண் ஒருவா், நாகை வெளிப்பாளையம் பகுதியில் வசிக்கும் தனது தங்கை வீட்டில் தங்கியிருந்து, கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா்.
இவா், புதன்கிழமை இரவு பணிமுடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். நாகை வண்டிப்பேட்டை அருகே நடந்து சென்றபோது, அவரை 2 இளைஞா்கள் வழிமறைத்து, துணியால் வாயை மூடி அப்பகுதியில் உள்ள கோயில் வளாகத்துக்கு கொண்டு சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனா்.
இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்தப் புகாரின் பேரில், வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நாகை, வெளிப்பாளையம் வண்டிப்பேட்டை பகுதியைச் சோ்ந்த மு. அருண்ராஜ் (25), அக்கரைக்குளம் பகுதியைச் சோ்ந்த கு. ஆனந்த் (24) ஆகியோரை கைது செய்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

