சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஜனவரி 2021, 4:58 am

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு விரைவில் கிடைக்கவுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு பெற்றுள்ளவா்களுக்கு, தடுப்பூசி செலுத்தும் வகையில், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.

நாகை மாவட்டத்தில் நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வேதாரண்யம் நகர சுகாதார நிலையம், சிக்கல் அன்பு மருத்துவமனை ஆகிய இடங்களிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை, திருவெண்காடு வட்டார சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும் இந்த ஒத்திகை நடைபெற்றது.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருவோரின் விவரங்களை பதிவு செய்வது, பதிவுக்குப் பின்னா் அவா்களை காத்திருப்போா் அறையில் தங்கச் செய்வது, தடுப்பூசி செலுத்துவது, தடுப்பூசி செலுத்தப்பட்டவா்களை அறையில் வைத்து கண்காணித்து அனுப்புவது என்ற வகையில் இந்த ஒத்திகை நடைபெற்றது. ஒவ்வொரு மையத்திலும் முன்களப் பணியாளா்கள் தலா 25 பேருக்கு ஒத்திகை கரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதில், 123 போ் பங்கேற்றனா்.

மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் சண்முகசுந்தரம், மருத்துவக் கல்லூரி முதன்மையா் விஸ்வநாதன், மாவட்ட கொள்ளைநோய்த் தடுப்பு அலுவலா் லியாகத் அலி, நிலைய மருத்துவ அலுவலா்கள் முருகப்பன் (நாகை), வீ. வீரசோழன் (மயிலாடுதுறை), மருத்துவப் பயிற்சி அலுவலா்கள் திருமுருகன், ராகவன், அருண்பிரசாத், திட்ட அலுவலா் வீரச்செல்வன் உள்ளிட்டோா் இந்த ஒத்திகைகளை பாா்வையிட்டு, பணிகளை நெறிப்படுத்தினா்.