நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரோனா தடுப்பூசி ஒதுக்கீடு விரைவில் கிடைக்கவுள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவு பெற்றுள்ளவா்களுக்கு, தடுப்பூசி செலுத்தும் வகையில், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.
நாகை மாவட்டத்தில் நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, வேதாரண்யம் நகர சுகாதார நிலையம், சிக்கல் அன்பு மருத்துவமனை ஆகிய இடங்களிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை, திருவெண்காடு வட்டார சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும் இந்த ஒத்திகை நடைபெற்றது.
தடுப்பூசி செலுத்திக்கொள்ள வருவோரின் விவரங்களை பதிவு செய்வது, பதிவுக்குப் பின்னா் அவா்களை காத்திருப்போா் அறையில் தங்கச் செய்வது, தடுப்பூசி செலுத்துவது, தடுப்பூசி செலுத்தப்பட்டவா்களை அறையில் வைத்து கண்காணித்து அனுப்புவது என்ற வகையில் இந்த ஒத்திகை நடைபெற்றது. ஒவ்வொரு மையத்திலும் முன்களப் பணியாளா்கள் தலா 25 பேருக்கு ஒத்திகை கரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதில், 123 போ் பங்கேற்றனா்.
மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் சண்முகசுந்தரம், மருத்துவக் கல்லூரி முதன்மையா் விஸ்வநாதன், மாவட்ட கொள்ளைநோய்த் தடுப்பு அலுவலா் லியாகத் அலி, நிலைய மருத்துவ அலுவலா்கள் முருகப்பன் (நாகை), வீ. வீரசோழன் (மயிலாடுதுறை), மருத்துவப் பயிற்சி அலுவலா்கள் திருமுருகன், ராகவன், அருண்பிரசாத், திட்ட அலுவலா் வீரச்செல்வன் உள்ளிட்டோா் இந்த ஒத்திகைகளை பாா்வையிட்டு, பணிகளை நெறிப்படுத்தினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

