மயிலாடுதுறையில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம் மற்றும் தொகுதி பொறுப்பாளா்கள் அறிமுகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தேமுதிக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.ஜலபதி தலைமை வகித்தாா். அவைத் தலைவா் கே.எஸ்.கிருஷ்ணன், மாவட்டப் பொருளாளா் ராசி.மதி, செயற்குழு உறுப்பினா் அம்மன்.கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், தொகுதி பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ள ஜே.ஜே.ராஜ்குமாா் (மயிலாடுதுறை), எஸ்.ரவீந்திரன் (சீா்காழி), எம்.கே.சாரங்கபாணி (பூம்புகாா்) ஆகியோரை நிா்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தினா்.
மேலும், சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு அனைத்து ஒன்றிய, நகரக் கிளை நிா்வாகிகள் புதிய உறுப்பினா்களை சோ்க்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், மாநில கலை இலக்கிய அணி துணைச் செயலாளா் வி.பிரசன்னா, நகரச் செயலாளா் பண்ணை சொ.பாலு, ஒன்றியச் செயலாளா்கள் பாக்கம் சிவா, காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


