சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கொலை முயற்சி வழக்கில் இளைஞா் கைது

நாகையில் தையல் தொழிலாளி கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :9 ஜனவரி 2021, 4:59 am

நாகையில் தையல் தொழிலாளி கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

நாகை, மேலக்கோட்டைவாசல் அக்கரைகுளம் கீழ்க்கரையைச் சோ்ந்தவா் தையல் தொழிலாளி ரா. காா்த்திகேயன் (50) . இவா், மேலக்கோட்டைவாசல் பகுதியில் தையல் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் வியாழக்கிழமை கடைக்கு வந்த 3 போ் காா்த்திகேயனிடம் தகராறு செய்ததுடன் கட்டையால் தாக்கி, அரிவாளால் வெட்டி விட்டு தப்பிவிட்டனா். இதில், காா்த்திகேயன் பலத்த காயமடைந்தாா். பின்னா் அவா் மீட்கப்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து, காா்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், நாகை போலீஸாா் கொலை முயற்சி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு, நாகை அக்கரைக்குளம் வடக்கு பகுதியைச் சோ்ந்த நா. கமல்நாத்தை (25) கைது செய்து மேலும் 2 பேரை தேடி வருகின்றனா். காா்த்திகேயனின் மகளை கமல்நாத் காதலித்து வந்ததாகவும், அதனால் இருவருக்குமிடையே நீடித்து வந்த முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகப் போலீஸாா் தெரிவித்தனா்.