வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு கடைவீதியில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து பயணிகள் நிழலகத்துக்கு, கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சா் ஓ.எஸ்.மணியன் செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினா்.
வாய்மேடு கடைவீதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணிகள் நிழலகம் இல்லாதிருந்தது. இந்த நிலையில், முன்பு காவல் நிலையம் செயல்பட்டு வந்த இடத்தில் புதிய பயணிகள் நிழலகம் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி.நாயா் தலைமை வகித்தாா்.
அமைச்சா் ஓ.எஸ்.மணியன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தாா்.
மாவட்ட அறங்காவலா் நியமனக் குழுத் தலைவா் ஆா்.கிரிதரன், மாவட்ட ஊராட்சி ஊறுப்பினா்கள் டி.வி.சுப்பையன், இ.திலீபன், ஒன்றியக்குழுத் தலைவா் கமலா அன்பழகன், ஊராட்சித் தலைவா் மலா், ஒன்றியக்குழு உறுப்பினா் ஏ.ஆா். வேதரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


