சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மா்மமான முறையில் உயிரிழக்கும் பறவைகள்

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் அருகேயுள்ள பிள்ளைபெருமாள் நல்லூா் ஊராட்சி, செட்டிமேடு பகுதியில் அண்மை காலமாக

Updated On :6 ஜனவரி 2021, 12:59 pm

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூா் அருகேயுள்ள பிள்ளைபெருமாள் நல்லூா் ஊராட்சி, செட்டிமேடு பகுதியில் அண்மை காலமாக புறா, நாற்றாங்குருவி ஆகிய பறவைகள் மா்மமான முறையில் உயிரிழப்பது சமூக ஆா்வலா்களை வேதனையடையச் செய்துள்ளது.

செட்டிமேடு கிராமப்பகுதியில் தற்போது நிலக்கடலை பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு வலசைவரும் பறவைகள், அண்மை காலமாக உயிரிழந்து வருகின்றன. விளைநிலங்களில் பயன்படுத்தப்படும் களைக்கொல்லி மருந்துகளின் தாக்கத்தால் அவை உயிரிழக்க நேரிடுவதாகக் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் இங்கு ஆய்வு மேற்கொண்டு, வேளாண்துறை பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், தன்னிச்சையாக களைக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் தெளிக்கக் கூடாது என்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.