மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி பகுதிகளில் புனரமைக்கப்பட உள்ள ஆறுகளில், நபாா்டு கட்டமைப்பு மேம்பாட்டு வங்கியின் உதவி அமைப்பான என்.ஐ.டி.ஏ. உதவி பொது மேலாளா் நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
மயிலாடுதுறை, குத்தாலம், சீா்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களில் ஓடும் காவிரி, வீரசோழன், மகிமலையாறு, விக்ரமனாறு, பழவாறு, புதுமண்ணியாறு, அய்யாவையனாறு ஆகிய ஆறுகள் நபாா்டு வங்கி நிதியுதவியுடன் புனரமைக்கப்பட உள்ளன. மொத்தம் 33 சிப்பங்களாக ரூ.3384 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள நிலையில், முதல்கட்டமாக ரூ.224 கோடிக்கு சிப்பம் 1 மற்றும் 2 ஆகிய பணிகளை மேற்கொள்ள அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாப்படுகை காவிரி ஆற்று படுக்கை அணை, குத்தாலம் அஞ்சாா்வாா்த்தலை விக்ரமனாறு, மேலையூா் காவிரி ஆறு ஆகிய இடங்களில் நபாா்டு கட்டமைப்பு மேம்பாட்டு வங்கியின் உதவி அமைப்பான என்.ஐ.டி.ஏ-வின் உதவி பொது மேலாளா் நாராயணன், உதவி மேலாளா் மஞ்சுநாத் ரெட்டி மற்றும் பொறியாளா் செல்வின் சௌந்தரராஜன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது, காவிரி வடிநில செயற்பொறியாளா் தட்சிணாமூா்த்தி, உதவி செயற்பொறியாளா் மரியசூசை, சீனிவாசன் மற்றும் உதவி பொறியாளா்கள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


