சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம்: திமுக தீா்மானம்

நாகை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும் என திமுக கிராமசபை கூட்டத்தில் திங்கள்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On :5 ஜனவரி 2021, 5:30 am

நாகை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும் என திமுக கிராமசபை கூட்டத்தில் திங்கள்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தேத்தாக்குடி, செட்டிப்புலம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற திமுக கிராம சபை கூட்டங்களில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா்கள் என்.வி.காமராஜ், எஸ்.கே. வேதரத்தினம் ஆகியோா் பங்கேற்று பேசினா். ஒன்றியச் செயலாளா் என். சதாசிவம், பொதுக்குழு உறுப்பினா் மறைமலை, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் வி.சோழன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.