சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல், சீருடைகள்

நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா பாடநூல், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :5 ஜனவரி 2021, 5:30 am

நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா பாடநூல், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி பங்கேற்று 6, 7-ஆம் வகுப்பு மாணவிகள் 125 பேருக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கினாா். மாவட்டக் கல்வி அலுவலா் டி. உஷா சாந்தா சாய், கல்வி ஆய்வாளா் வி. ராமநாதன், மாவட்டக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் வைத்தியநான், அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பீட்டா், தலைமையாசிரியா் கே. பிரேமா ஆகியோா் கலந்துகொண்டனா்.

காடம்பாடி பள்ளியில்... இதேபோல், நாகை, காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும் மாணவா்களுக்கு பாட நூல்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியா் இளமாறன் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.