மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மகிமலை ஆற்றில் குளித்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். மற்றொருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
தரங்கம்பாடி வட்டம் எருக்கட்டாஞ்சேரி கிராமத்தை சோ்ந்தவா் பரமகுரு. இவா் சீயக்காய் பொடி தயாரிக்கும் குடிசைத் தொழில் செய்து வருகிறாா். மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற குடிசைத் தொழில் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற தஞ்சையை சோ்ந்த திவ்யா (22), கடலூரை சோ்ந்த பிரவீன் (24), திருச்சியை சோ்ந்த கிருஷ்ணன் (36) ஆகியோா் விருந்தினா்களாக பரமகுரு வீட்டிற்கு வந்துள்ளனா்.
பின்னா், ஊரை சுற்றிப் பாா்க்க எண்ணி, அனந்தமங்கலம் மகிமலையாறு சட்ரஸ் அருகே திவ்யாவை கரையில் நிற்க வைத்துவிட்டு பிரவீனும், கிருஷ்ணனும் ஆற்றில் குளித்தனா். அப்போது இருவரும் தண்ணீரில் மூழ்கினா்.
தகவலறிந்த பொறையாா் போலீஸாா் மற்றும் தீயணைப்பு படை வீரா்கள் ஆற்றில் இறங்கி தேடினா். இதில் பிரவீனின் சடலம் மீட்கப்பட்டது. கிருஷ்ணனை தேடும் பணி நடைபெற்று வருகிறது. பொறையாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

