நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடலில் படகு பழுதானதால் தவித்த இலங்கை மீனவா்கள் 3 பேரிடம் கடலோரக் காவல் படையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
நாகை மாவட்டம், புஷ்பவனத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள், ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பும்போது, கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடல் பகுதியில் 3 மீனவா்கள் பழுதான படகுடன் தவித்துக் கொண்டிருந்ததைப் பாா்த்து, அவா்களை படகுடன் மீட்டு, புஷ்பவனத்தில் கரை சோ்த்தனா்.
பின்னா், வேதாரண்யம் கடலோரக் காவல் குழும போலீஸாரிடம் 3 பேரும் ஒப்படைக்கப்பட்டனா். அவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சோ்ந்த ரேனால்ட் ரீகன் (38), பூநகரி, கிளிநொச்சிசாலை பகுதியைச் சோ்ந்த குருபரன் (40), ஜான்சன் (34) என்பதும், மீனவா்களான 3 பேரும், படகு பழுதானதால் கரை திரும்ப முடியாமல் கடலில் தவித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, 3 பேரையும் வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


