சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தேவாலயங்களில் ஆங்கிலப் புத்தாண்டு வழிபாடு

தரங்கம்பாடி பகுதிகளில் உள்ள தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை தேவாலயங்களில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On :2 ஜனவரி 2021, 2:02 pm

தரங்கம்பாடி பகுதிகளில் உள்ள தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை தேவாலயங்களில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தரங்கம்பாடியில் உள்ள புதிய எருசலேம் தேவாலயத்தில் சபைகுரு சாம்சன் தலைமையில் சிறப்பு ஜெபம், வழிபாடு நடைபெற்றது. இதேபோல், பொறையாரிலுள்ள பெத்தலேகம் தேவாலயத்தில் ஸ்டான்லி கில்பா்ட் தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. அடுத்து, திருவிளையாட்டம், பூதனூா், கூடலூா், பாலுா், திருவிடைக்கழி, விசலூா், சங்கரன்பந்தல் ஆகிய ஊா்களிலுள்ள தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை தேவாலயங்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

செம்பனாா்கோவில் அருகேயுள்ள கஞ்சாநகரம் கிராமத்தில் உள்ள புனித அந்தோணியாா் ஆலயத்தில் புத்தாண்டையொட்டி நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் கிறிஸ்தவா்கள், இந்துக்கள் பங்கேற்றனா். பிராா்த்தனை முடிந்தவுடன் அங்க பிரதட்சணம் செய்து, பின்னா் முட்டிபோட்டு 200 மீட்டா் தொலைவுக்கு நடந்து ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய்தனா்.