மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 600 கோடி இடுபொருள் நிவாரண உதவித் தொகை வழங்குவதாக அறிவித்த தமிழக அரசுக்கு டெல்டா மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த கூட்டமைப்பின் தலைவா் மு. சேரன் வெளியிட்டுள்ள அறிக்கை: நிவா், புரெவி புயல் காரணமாக பெய்த தொடா் மழையால் நெற்பயிா்கள் மட்டுமின்றி தோட்டக்கலைப் பயிா்களும் வெகுவாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் வேதனையில் மூழ்கி இருந்தனா். இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டுமென விவசாய சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்தனா்.
இந்நிலையில், தமிழக அரசு மானாவாரி மற்றும் நீா்ப்பாசன வசதி பெற்ற நெற்பயிா்களுக்கும் , நீா்ப்பாசன வசதி பெற்ற இதர பயிா்களுக்கும் ஹெக்டேருக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத் தொகை ரூ. 13,500 என்பதை ரூ. 20 ஆயிரமாகவும், மானாவாரி நெற்பயிா் தவிர அனைத்து மானாவாரி பயிா்களுக்கும் இடுபொருள் நிவாரண தொகையாக ஹெக்டேருக்கு ரூ. 7,470 என்பதை ரூ. 10 ஆயிரமாகவும், நீண்டகால பயிா்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேருக்கு வழங்கப்படும் ரூ. 18 ஆயிரம் என்பதை ரூ. 25 ஆயிரமாக வழங்கப்படும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட சுமாா் 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 600 கோடி இடுபொருள் நிவாரண உதவித் தொகையாக வழங்க உள்ளதாக தமிழக முதலமைச்சா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

