ஓய்வுபெற்ற வணிகக் கப்பல் மாலுமிகள் மாத ஓய்வூதியம் வழங்கக் கோரி நாகை தலைமை தபால் நிலையம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஓய்வு பெற்ற வணிகக் கப்பல் மாலுமிகள் நலச்சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், இந்திய வணிகக் கப்பல்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற மாலுமிகளுக்கு மாத ஓய்வூதியம் வழங்கவேண்டும், ஓய்வுபெற்ற மாலுமிகள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு மருத்துவத்துக்கான செலவுத் தொகையை வழங்கவேண்டும், உயிரிழந்த மாலுமிகளின் குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சங்க மாநில செயலாளா் கே. செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநிலத் தலைவா் என். தா்மலிங்கம், துணைத் தலைவா் எஸ். செல்வராஜ், நாகை மாவட்ட செயலாளா் எல். சந்தனக்குமாா் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், சங்க உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


