நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உப்பு உற்பத்திக்கு உதவும் வகையில் வானிலை ஆய்வு கண்காணிப்பு நிலையம் அமைக்க வேண்டுமென சிறு உப்பு உற்பத்தியாளர்கள் இணையம் வலியுறுத்தியுள்ளது.
இந்த இணையத்தின் பொதுக்குழுக் கூட்டம் அதன் தலைவர் மா. மீனாட்சிசுந்தரம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் வர்த்தகர் சங்கத் தலைவர் எஸ்.எஸ். தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
வேதாரண்யம் பகுதியில் மேற்கொள்ளப்படும் உப்பு உற்பத்தி இயற்கை சீற்றக்காலத்தில் பாதிப்புக்குள்ளாவதை தவிர்க்க, தூத்துக்குடி, மரக்கணம், அதிராம்பட்டினம் ஆகிய இடங்களில் இருப்பதைபோல, வேதாரண்யத்தில் வானிலை ஆய்வு நிலையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்.
வேதாரண்யம் பகுதியில் உப்பு உற்பத்திக்கான இடங்களுக்கு குத்தகை உரிமை அளிப்பது, உரிமையை மாற்றுவது போன்றவை நடந்துள்ள நிலையில், அது தொடர்பான விவரங்களைத் தர தொடர்புடைய அலுவலர்கள் மறுத்து வருகின்றனர். இந்த மாறுதல் உப்பு உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவந்தால் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

