சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புதை சாக்கடைப் பணி: நாகை - நாகூர் சாலை போக்குவரத்து மாற்றம்

நாகையில் புதை சாக்கடை குழாய் பதிக்கும் பணியையொட்டி, நாகை - நாகூர் வழியேயான சாலைப் போக்குவரத்து

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:18 pm

நாகையில் புதை சாக்கடை குழாய் பதிக்கும் பணியையொட்டி, நாகை - நாகூர் வழியேயான சாலைப் போக்குவரத்து ஆக. 23-ம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகிறது என நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை தேசிய நெடுஞ்சாலையில் ஐ.டி.ஐ பிள்ளையார் கோயிலிலிருந்து, வெளிப்பாளையம் தம்பித்துரை பூங்கா வரையிலான சாலையில் புதை சாக்கடை குழாய் பதிக்கும் பணி ஆக. 23-ம் தேதி தொடங்கப்பட்டு, அக். 22-ம் தேதி வரை நடைபெறும்.

இதையொட்டி, ஆக. 23-ம் தேதி முதலான 2 மாத காலத்துக்கு நாகை - நாகூர் தேசிய நெடுஞ்சாலை ஒருவழிப் பாதையாக அறிவிக்கப்படுகிறது. நாகூர் வழியாக நாகை  வரும் அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் வாஞ்சூரிலிருந்து கிழக்கு  கடற்கரை சாலை வழியே நாகைக்கு இயக்கப்பட வேண்டும்.

பொதுமக்களின் வசதிக்காக, அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில் நாகை புதிய  பேருந்து நிலையத்திலிருந்து நாகூர் வரை சிறப்பு நகரப் பேருந்துகள் இயக்கப்படும்  என்று அவர் தெரிவித்துள்ளார்.