புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தை (நீட்ஸ்) இளைஞர்கள் மற்றும் பெண்கள் சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி.
நாகை இ.ஜி.எஸ் பொறியியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்ட (நீட்ஸ்) விழிப்புணர்வுக் கூட்டத்தில் அவர் பேசியது:
அதிகளவில் வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை அதிகளவில் உருவாக்கும் வகையிலும், புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் வகையிலும் தமிழக அரசு நீட்ஸ் திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்தத் திட்டம் மூலம் குறைந்தபட்சம் ரூ. 5 லட்சம் முதல், அதிகபட்சம் ரூ. 1 கோடி வரை 25 சதவீத மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.
21 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட பொது பிரிவினரும், 45 வயதுக்குள்பட்ட சிறப்புப் பிரிவினரும் இத்திட்டத்தில் பயனடையலாம். இத்திட்டத்தில் 50 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டுத் தொழில் நிறுவனம் அமைக்கவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்தத் திட்டத்தை நாகை மாவட்ட இளைஞர்கள், பெண்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, தொழில் வளத்தை மேம்படுத்த உறுதுணையாகச் செயல்பட வேண்டும் என்றார்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் என்.எம். சிவசாமி, நபார்டு பொது மேலாளர் டி. கணேஷ், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தொழில் வளர்ச்சி அலுவலர் டி. சந்தானம், மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளர் (பொறுப்பு) சா. அரசு, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் எம்.என். சீனிவாசன், மாவட்ட சிறுதொழில் சங்கத் தலைவர் என். பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

