சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நாகை ஆயுதப்படை மைதானத்திலிருந்த ஜீப் என்ஜின் திருட்டு: 5 பேரிடம் விசாரணை

நாகை ஆயுதப்படை மைதானத்தில்  நிறுத்தப்பட்டிருந்த பழுதடைந்த ஓர் ஜீப்பின் என்ஜின்  திருட்டுபோனது

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:45 pm

நாகை ஆயுதப்படை மைதானத்தில்  நிறுத்தப்பட்டிருந்த பழுதடைந்த ஓர் ஜீப்பின் என்ஜின்  திருட்டுபோனது புதன்கிழமை காலை தெரியவந்தது.

நாகை மாவட்டக் காவல் துறை பயன்பாட்டிலிருந்து, பழுது காரணமாக உபோயகமற்றதாக ஒதுக்கப்பட்ட ஒரு ஜீப், அண்மையில் பொது ஏலத்தில் விற்கப்பட்டது.

இந்த ஜீப்பை சென்னையைச் சேர்ந்த ஒருவர் ஏலம் எடுத்திருந்தார். இருப்பினும், அந்த ஜீப் நாகை ஆயுதப்படை மைதானத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், அந்த ஜீப் என்ஜின் மற்றும் ரேடியேட்டர் ஆகியன திருட்டுபோனது.

இதுகுறித்து போலீஸார் விசராணை மேற்கொண்டு திருட்டுபோன ஜீப் என்ஜினை கைப்பற்றி, 5 பேரிடம் சந்தேகத்தின்பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பாதுகாப்பற்ற மைதானம்

நாகை ஆயுதப்படை மைதானம் சுமார் 4 ஏக்கர் பரப்பைக் கொண்டது. இந்த மைதானத்தின் முன்புறம் மட்டுமே சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மற்றப் பகுதிகளில் சுற்றுச் சுவர் இல்லாததால், இந்த மைதானத்துக்குள் ஆடு, மாடுகள் சுற்றித் திரிவது வழக்கம்.

பாதுகாப்பு இல்லாத இந்த மைதானத்தின் பின்பகுதியில் பல வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.