நாகை மாவட்டம், திருவாவடுதுறை ஆதீனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆவணி திருமஞ்சன விழாவில் சீர்காழி முனைவர் வி. ராமதாஸின் தமிழ்ப் பணியை பாராட்டி அவருக்கு "சிவாஞனக் கலாநிதி' எனும் சிறப்பு விருது வழங்கப்பட்டது.
திருவாவடுதுறை ஆதீனம் ஆன்மார்த்த மூர்த்தி, அருள்மிகு ஞானமா நடராஜப் பெருமான் ஆவணி திருமஞ்சன விழா நடைபெற்றது.
இவ்விழாவையொட்டி, காலை நேர நிகழ்வாக ஞானமா நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னர், மாலையில் ஆதீனம் வேணுவனலிங்க விலாச அரங்கில் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றன.
அதைத் தொடர்ந்து, ஆதீன குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள், ஞானமா நடராஜப் பெருமான் சன்னதிகளில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் 24 ஆவது குருமகா சன்னிதானம் சீர்வளர்சீர் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்றார்.
பின்னர், சீர்காழி முனைவர் வி. ராமதாஸ் எழுதிய எங்கெங்கு காணினும் எழில் முருகன், திருநெறியும், தமிழ்மொழியும் எனும் நூல்களை ஆதீன கர்த்தர் வெளியிட, அதை தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். சுரேஷ்குமார் பெற்றுக்கொண்டார்.
விழா நிறைவில், முனைவர் வி. ராமதாஸின் தமிழ்ப் பணிகளை பாராட்டி அவருக்கு பொன்னாடை மற்றும் உருத்திராக்கம் அணிவித்து, ரூ. 5 ஆயிரத்துக்கான பொற்கிழியையும், "சிவஞானக் கலாநிதி' எனும் சிறப்பு விருதையும் ஆதீன கர்த்தர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஆதீனம் கட்டளை சுப்பிரமணியத் தம்பிரான் சுவாமிகள், பொது மேலாளர் சீ. ஜோதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

