பொதுவாக மழைக்காலத்தில் தலை முடிக்கு அதிக பராமரிப்பு அவசியமாகிறது.
ஏன் எனில் மழை காரணமாக தலை முடி ஈரமாகவும், அடிக்கடி அழுக்காகவும் ஆகலாம். எனவே, மழைக்காலத்தில் தலை முடிக்கு சில சிறப்பு கவனங்களை செய்ய வேண்டும்.
மழைக் காலங்களுக்கு என இருக்கும் சில சிறப்பு பேஸ்டுகளை வாங்கி தலைக்கு போடலாம்.
இது ஒத்துக் கொள்ளாது என்று நினைப்பவர்களுக்கு சில இயற்கை முறைகள் கொடுக்கப்பட்டுள்ன.
உலர்ந்த தலை முடி இருப்பவர்கள் வாரத்தில் ஒரு நாள் தலைக்குக் குளித்த பிறகு தயிரை தேய்த்துக் முடியைக் கழுவி விடலாம்.
பழுத்த வாழைப் பழத்தை நன்கு அரைத்து, அதனை தலையில் தடவினால், மழைக் காரணமாக முடி உலர்ந்து கொட்டுவது குறையும்.
எண்ணெய் பசை உள்ள தலைமுடிக்கு, எலுமிச்சை நல்லது. தலைக்கு குளித்த பிறகு, ஒரு பெரிய ஜக்கில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் எலுமிச்சை சாறு சேர்த்து, அதில் தலை முடியை ஊற விட்டு அலசவும்.
முட்டையின் வெள்ளைக் கரு எண்ணெய் பசை உள்ள தலை முடிக்கு ஏற்றது. தலைக்கு குளித்த பிறகு வெள்ளைக் கருவை தலை முதல் முடியின் நுனி வரை தடவி சில நிமிடங்கள் ஊறுவிட்டு அலசினால் நன்றாக இருக்கும்.
சாதாரண தலை முடிக்கு, எலுமிச்சை சாறு மற்றும் தயிர் கலந்த தண்ணீரில் தலை முடியை ஊறவிட்டு அலசலாம்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

