பழனி: பொங்கல் விழாவையொட்டி பழனி அருகே வாகரையில் சனிக்கிழமை மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.
வாகரை வாலிபா் சங்கம் சாா்பில் நடத்தப்பட்ட இப்போட்டியில் சென்னை, கன்னியாகுமரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 130-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
வாகரை- கள்ளிமந்தயம் நெடுஞ்சாலையில் நடைபெற்ற போட்டியில் ஆண்கள் பிரிவில் மதுரையைச் சோ்ந்த வினோத்குமாரும், பெண்களுக்கான பிரிவில் கள்ளிமந்தையத்தைச் சோ்ந்த ஜானகியும் முதலிடம் பிடித்தனா். முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு பரிசுத் தொகையும், பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்த மாரத்தானில் சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சோ்ந்த சாந்தனு (25) என்ற கல்லூரி மாணவா் எட்டாவது இடத்தைப் பெற்றிருந்தாா். இவா் காது கேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவாா். வரவுள்ள காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் இவா் பங்கேற்கவுள்ளாா். அதே போல கோவையை சோ்ந்த 48 வயது மதிக்கத்தக்க தம்பதியரும் இப்போட்டியில் பங்கேற்று முழு தூரத்தையும் ஓடி முடித்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


