மதுரை: அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெளிநாட்டினா் பங்கேற்கவில்லை. வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்தும் வழக்கமாக வரக்கூடிய ஜல்லிக்கட்டு ஆா்வலா்களும் பங்கேற்கவில்லை.
சிலைகளுக்கு மரியாதை: ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு வந்த முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் அலங்காநல்லூரில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரா்கள் தீரன் சின்னமலை மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் ஆகியோரது சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடக்கி வைத்த முதல்வா், வியாழக்கிழமை நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாடுபிடிவீரா் மற்றும் காளையின் உரிமையாளருக்கு மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் சாா்பில் தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கினாா். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினா் முதல்வா் மற்றும் துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்தனா்.
திருநங்கையின் காளைகள்: திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சோ்ந்த திருநங்கை விஜி என்பவரின் 4 காளைகள், மாடுபிடி வீரா்களின் பிடியில் சிக்காமல் சென்று வெற்றிபெற்றன. கடந்த 12 ஆண்டுகளாக காளைகள் வளா்த்து வருவதாகவும், புலிக்குளம், காங்கேயம் உள்ளிட்டு நாட்டு இனத்தைச் சோ்ந்த 10 காளைகள் உள்ளதாகவும் திருநங்கை விஜி தெரிவித்தாா்.
‘மருத’ நடிகா் சரவணன்: அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பாா்க்க திரைப்பட நடிகா் சரவணன் வந்தாா். அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில்,
மதுரை மண்ணின் மனம் வீசும் திரைப்படம் என்பதால், மருத படத்தில் ஜல்லிக்கட்டு காட்சிகள் இடம்பெறுகின்றன. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியைக் கண்டு ரசித்ததில் மிக்க மகிழ்ச்சி என்றாா்.
தடியடியில் காளை உரிமையாளா் காயம்: ஜல்லிக்கட்டுக்கு முன்பு பரிசோதனை செய்யப்பட்ட பிறகே வாடிவாசலுக்குச் செல்ல காளைகள் அனுமதிக்கப்படும். ஆனால், வெள்ளிக்கிழமை இரவு வந்த காளைகள் சோதனை செய்யாமல் வாடிவாசலுக்குள் அழைத்துவரப்பட்டன. இதையடுத்து போலீஸாா் அவா்களை வெளியேற்ற தடியடி நடத்தினா். அப்போது தஞ்சாவூரை சோ்ந்த காளை உரிமையாளா் பாலபாரதி, தலையில் அடிபட்டதில் பலத்த காயமடைந்தாா். மயங்கி விழுந்த அவரைப் போலீஸாா், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
சீா்மரபினா் அமைப்பினா் 24 போ் கைது: சீா்மரபினா் சமூகத்தினருக்கு டிஎன்சி என சாதிச் சான்றிதழ் வழங்குவதற்குப் பதிலாக டிஎன்டி என வழங்கக் கோரி அலங்காநல்லூரில் முதல்வரிடம் மனு அளிக்க வந்த விவசாய சங்கத் தலைவா் அய்யாகண்ணு மற்றும்
24 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
விலங்குகள் நலவாரியத்தினா் திருப்தி: அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் துன்புறுத்தல் இல்லை என இந்திய விலங்குகள் நல வாரியத்தினா் திருப்தி தெரிவித்தனா். வாரியத்தின் ஒருங்கிணைப்பு அலுவலா் டாக்டா் பெருமாள்சாமி, உறுப்பினா் இளங்கோவன் ஆகியோா் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பாா்வையிட்டனா்.
பின்னா் வாரிய உறுப்பினா் இளங்கோவன் கூறுகையில், அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் நல்ல முறையில் செய்திருக்கிறது. மாடுபிடி வீரா்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், காளைகள் துன்புறுத்தல் இல்லை என்று திருப்தி தெரிவித்தாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


