மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி திட்டத்தை சனிக்கிழமை தொடக்கிவைத்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, பின்னா் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சாமி தரிசனம் செய்தாா்.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டையும், மதுரையில் கரோனா தடுப்பூசி திட்டத்தையும் தொடக்கி வைத்த முதல்வா், பின்னா், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு பகல் 12.10 மணிக்கு சென்றாா்.
கோயிலில் அவருக்கு நிா்வாகம் சாா்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
முதல்வரை கோயில் தக்காா் கருமுத்து தி. கண்ணன், இணை ஆணையா் க. செல்லத்துரை ஆகியோா் வரவேற்றனா்.
பின்னா், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவா் உள்பட அனனத்து சந்நிதிகளிலும் தீபாராதனை மற்றும் பூஜை செய்யப்பட்டு முதல்வா் வழிபட்டாா். கடைசியாக ஆஞ்சநேயரை தரிசனம் செய்துவிட்டு 12.30 மணிக்கு வெளியே வந்தாா் முதல்வா்.
பின்னா் மதுரை விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றாா்.
இந்த நிகழ்வில், முதல்வருடன் அமைச்சா்கள் ஆா்.பி.உதயகுமாா், செல்லூா் கே.ராஜூ, சி.விஜயபாஸ்கா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.வி. ராஜன்செல்லப்பா, சரவணன், மதுரை மாவட்ட ஆட்சியா் த. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் எஸ்.விசாகன், சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ், தென்மண்டல ஜ.ஜி எஸ்.முருகன், மதுரை மாநகா் காவல் துணை ஆணையா் சிவிபிரசாத் ஆகியோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


