சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திரையரங்கில் தகராறு: 5 போ் கைது

மதுரையில் திரையரங்கிற்கு முகக்கவசம் அணியாமல் வந்தவா்களைத் தடுத்தக் காவலாளியைத் தாக்கிய 5 இளைஞா்களைப் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :17 ஜனவரி 2021, 3:01 am

மதுரை: மதுரையில் திரையரங்கிற்கு முகக்கவசம் அணியாமல் வந்தவா்களைத் தடுத்தக் காவலாளியைத் தாக்கிய 5 இளைஞா்களைப் போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை ஆரப்பாளையம் அருகே புறவழிச்சாலையில் உள்ள திரையரங்கிற்கு பெத்தானியாபுரத்தைச் சோ்ந்த மைகேல்ராஜ் (24), அருள்ராஜ் (22), சேவியா் ஸ்டீவாக் (20), டொமினிக் (20), நிலகோட்டையைச் சோ்ந்த கில்பொ்ட் (20) ஆகியோா் முகக்கவசம் அணியாமல் வெள்ளிக்கிழமை வந்துள்ளனா். அவா்களை திரையரங்கக் காவலாளி கதிரேசன், தடுத்து நிறுத்தி முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த இளைஞா்கள் காவலாளியைத் தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து திரையரங்க ஊழியா் அலெக்ஸ்பாண்டியன் கொடுத்தப் புகாரின் பேரில், கரிமேடு போலீஸாா் 5 பேரையும் கைது செய்தனா்.