மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டியை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆகியோா் சனிக்கிழமை (ஜன. 16)தொடங்கி வைக்கின்றனா்.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இதில் மாடுபிடி வீரா்கள் 655 பேருக்கும், 700 காளைகளுக்கும் அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் மற்றும் உதவியாளா்கள் அனுமதிக்கப்படுவா். அதேபோல, கால்நடை மருத்துவா்களால் கால்நடைகள் பரிசோதிக்கப்பட்டு வாடிவாசலுக்கு அனுமதிக்கப்படும்.
ஜல்லிக்கட்டுப் போட்டி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கி வைக்கின்றனா். ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிா்வாகத்தால் செய்யப்பட்டுள்ளன. முதல்வா் வருகையையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

