சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருப்பரங்குன்றம் தென்பழஞ்சியில் பொங்கல் விழா கொண்டாடிய ராகுல் காந்தி

திருப்பரங்குன்றத்தை அடுத்த தென்பழஞ்சியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி கலந்துகொண்டார்.

News image

பொங்கல் விழாவில் ராகுல்காந்தி

Updated On :14 ஜனவரி 2021, 8:51 pm

திருப்பரங்குன்றத்தை அடுத்த தென்பழஞ்சியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி கலந்துகொண்டார்.

Story image

புதுதில்லியில் இருந்து அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்பதற்காக புதுதில்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை 11:45 மணி அளவில் தனி விமானம் மூலம் மதுரை வந்தார்.

Story image

தொடர்ந்து அவர் அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து தென்பழஞ்சி கிராம மக்கள் சார்பில் நடந்த பொங்கல் விழாவில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். பின் கிராம மக்களுடன் பொங்கல் உணவருந்திய ராகுல்காந்தி பின் புறப்பட்டு சென்றார்.

Story image

முன்னதாக  ராகுல்காந்திக்கு விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் கிராம மக்கள் கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய வழக்கப்படி  உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிராம மக்களுடன் உணவருந்திய ராகுல்காந்தி

கிராம மக்களுடன் உணவருந்திய ராகுல்காந்தி

தொடர்ந்து தென்பழஞ்சி இருந்து கார் மூலம் 2.30 மணிக்கு விமான நிலையம் வந்த அவர் 2.40 மணிக்கு தனி விமானத்தில் புது தில்லி புறப்பட்டுச் சென்றார்.