மதுரை அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞரைப் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஆலங்கொட்டாரம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபாகரன் (30). இவா் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளப்பட்டியைச் சோ்ந்த 16 வயது சிறுமியைத் திருமணம் செய்து கொண்டதாக வாடிப்பட்டி சமூக நலத்துறை அலுவலா் கிருஷ்ணவேணிக்கு புகாா் வந்தது. அதனடிப்படையில் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், உறவினரான பிரபாகரனுக்கு சிறுமியை 2 ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்து வைப்பதாக இருவீட்டாா் தரப்பிலும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிரபாகரன் சிறுமியிடம் பழகிவந்த நிலையில் சிறுமியின் தந்தை திருமணத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்துள்ளாா். இதையறிந்த பிரபாகரன் சிறுமியைக் கடத்திச் சென்று கருமாத்தூா் பகுதியில் உள்ள கோயிலில் வைத்து தாலி கட்டி குடும்பம் நடத்தி வந்துள்ளாா். இதில் சிறுமி 2 மாதக் கா்ப்பமானது தெரியவந்தது. இதுகுறித்து சமூக நலத்துறை அலுவலா் கிருஷ்ணவேணி அளித்தப் புகாரில், சோழவந்தான் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் பிரபாகரனை திங்கள்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

