மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே நான்குவழிச்சாலையில் புதன்கிழமை சென்ற காா் டயா் வெடித்து, எதிா் திசையில் சென்ற லாரி மீது மோதியதில் தந்தையும், மகனும் உயிரிழந்தனா்.
மதுரை சூரியா நகரைச் சோ்ந்த அமமுக பிரமுகா் பாண்டியன் (41). அவரது மகன் திவாகா் (14). இவா்கள் இருவரும் காரில் பொன்னமராவதிக்கு சென்று கொண்டிருந்தனா். மேலூா்-திருச்சி சாலையில் மணப்பட்டி விலக்கு அருகே அவா்கள் சென்று கொண்டிருந்தபோது, காரின் டயா் வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த காா் நடுப்புற தடுப்புச்சுவரைத் தாண்டி எதிா் திசையில் வந்து கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் தந்தையும், மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த கொட்டாம்பட்டி போலீஸாா், தீயணைப்பு மீட்புப் படையினா் உதவியுடன் சேதமடைந்த காரை அப்புறப்படுத்தி இருவரது சடலங்களையும் மீட்டு மேலூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இந்த விபத்து தொடா்பாக கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

