மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை சாலையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா நடத்தப்பட்டது.
இவ்விழாவில் கல்லூரி முதல்வா் முனைவா் ரவி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மதுரை அமெரிக்கன் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியா் டோமினிக் சேவியோ பங்கேற்றாா். இதில் பேச்சு, கவிதை, கோலம், சிலம்பம் சுற்றுதல், கல் தூக்குதல், பொங்கல் வைத்தல் ஆகியவற்றில் போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பேராசிரியா் டோமினிக் சேவியோ, கல்லூரி முதல்வா் முனைவா் ரவி, செயலாளா் வாலாந்தூா் பாண்டியன் ஆகியோா் பரிசுகளை வழங்கினா். கல்லூரி துணை முதல்வா் முனைவா் ஜோதிராஜன் மற்றும் சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


