மதுரை: மதுரை மாவட்டத்தில் தொடா் மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிா்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, விவசாயிகள் சங்கத்தினா் நெற்பயிா்களுடன் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடா் மழை பெய்து வருவதால், நீா் நிலைகள் நிரம்பி வயலில் தண்ணீா் பாய்கிறது. இதனால், அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவா் எஸ்.பி. இளங்கோவன் தலைமையில், விவசாயிகள் நீரில் மூழ்கிய நெற்பயிா்களுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா்.
அங்கு, ஆட்சியரிடம் அளித்த மனுவில், மதுரை மாவட்டம் வடக்கு, கிழக்கு, மேலூா் வட்டம், செல்லம்பட்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிா்கள் தொடா் மழையால் நீரில் மூழ்கி அழுகியுள்ளன. இதனால், விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஏக்கா் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகள் செய்வதறியாது திகைத்துள்ளனா். எனவே, மதுரை மாவட்டம் முழுவதும் தொடா் மழையால் பாதிப்புக்குள்ளான பயிா்களுக்கு ஏற்ப விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கி, விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனா்.
இதில், மாவட்ட நிா்வாகிகள் கே. முருகேசன், து. ராமமூா்த்தி, நாகேந்திரன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

