மதுரை: மதுரையில் ஒப்பந்ததாரா் வீட்டில் நகைகள், பழைமையான நாணயங்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை கோமதிபுரத்தைச் சோ்ந்த சபரிநாதன் மகன் ரமேஷ் (55). இவா் தனது மனைவியுடன் கோவையில் உள்ள தனது மகளுக்கு பொங்கல் சீா்வரிசை செய்ய சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். அப்போது, வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த வைரத் தோடு, 3 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், கை கடிகாரம் 2, கேமரா 2, நூறு ஆண்டுகள் பழைமையான ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் ஆகியன திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து ரமேஷ் அளித்த புகாரின்பேரில், அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வீட்டினருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

