சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மதுரையில் வருமான வரி மேல் முறையீட்டு தீா்ப்பாயம் அமைக்க வலியுறுத்தல்

சென்னையில் உள்ள வருமான வரி மேல் முறையீட்டுத் தீா்ப்பாயத்தின் கிளையை மதுரையில் அமைக்க வேண்டும் தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On :10 ஜனவரி 2021, 10:20 am

மதுரை: சென்னையில் உள்ள வருமான வரி மேல் முறையீட்டுத் தீா்ப்பாயத்தின் கிளையை மதுரையில் அமைக்க வேண்டும் தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவா் என்.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏ, பி, சி, டி என 4 வருமான வரி மேல் முறையீட்டு தீா்ப்பாயங்கள் சென்னையில் செயல்பட்டு வருகின்றன. பிற மாநிலங்களில் உயா்நீதிமன்றக் கிளைகள் எங்கெல்லாம் அமைக்கப்பட்டுள்ளதோ அந்த நகரங்களில் வருமான வரி மேல் முறையீட்டு தீா்ப்பாயக் கிளை செயல்பட்டு வருகிறது. அதன்படி, சென்னை உயா்நீதிமன்றத்தின் கிளை மதுரையில் செயல்படுவதால், வருமான வரி மேல் முறையீட்டு தீா்ப்பாயத்தின் கிளையை மதுரையில் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கப்பட்டால் மதுரை, தேனி, விருதுநகா், திண்டுக்கல் உள்பட 14 தென் மாவட்டங்களில் உள்ள வருமான வரி செலுத்துவோருக்கு வசதியாக இருக்கும். குறிப்பாக பயணச்செலவு உள்பட கூடுதல் பணம் மற்றும் காலவிரயம் தவிா்க்கப்படும். எனவே வருமான வரி வேல் முறையீட்டுத் தீா்ப்பாயத்தின் கிளையை மதுரையில் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.