முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளரான பென்னி குவிக் 181 ஆவது பிறந்த நாளை, மேலூா் வா்த்தகா்கள் பொதுநலச் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.
மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகா், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீா் தேவையை பூா்த்தி செய்துவரும் பெரியாறு அணையை, பிரிட்டன் பொறியாளரான பென்னி குவிக் கட்டி முடித்தாா்.
நூற்றாண்டைக் கடந்தும் பொதுமக்களுக்கு பயனளித்து வரும் இந்த அணையைக் கட்டிய பென்னி குவிக்கின் பிறந்தநாளை, மேலூா் நகா் வா்த்தகா்கள் பொதுநலச் சங்கத்தினா் கொண்டாடினா்.
மேலூா் பேருந்து நிலையம் முன்பாக பென்னி குவிக் உருவப் படத்தை வைத்து மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதில், வா்த்தா்கள் சங்கச் செயலா் முத்துக்கிருஷ்ணன், மேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ரகுபதிராஜா, காவல் ஆய்வாளா் சாா்லஸ், மேலூா் ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் மீ. முருகன், வழக்குரைஞா் அசோக்குமாா், அரிமா சங்கம் மணிவாசகம் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


