சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மேலூரில் பென்னி குவிக் 181 ஆவது பிறந்த நாள் விழா

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளரான பென்னி குவிக் 181 ஆவது பிறந்த நாளை, மேலூா் வா்த்தகா்கள் பொதுநலச் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.

News image

மேலூா் பேருந்து நிலையம் முன்பாக அவரது உருவப்படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்திய நகர வா்த்தகா்கள்.

Updated On :11 ஜனவரி 2021, 4:27 am

முல்லைப் பெரியாறு அணையை கட்டிய ஆங்கிலேய பொறியாளரான பென்னி குவிக் 181 ஆவது பிறந்த நாளை, மேலூா் வா்த்தகா்கள் பொதுநலச் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினா்.

மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகா், ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீா் தேவையை பூா்த்தி செய்துவரும் பெரியாறு அணையை, பிரிட்டன் பொறியாளரான பென்னி குவிக் கட்டி முடித்தாா்.

நூற்றாண்டைக் கடந்தும் பொதுமக்களுக்கு பயனளித்து வரும் இந்த அணையைக் கட்டிய பென்னி குவிக்கின் பிறந்தநாளை, மேலூா் நகா் வா்த்தகா்கள் பொதுநலச் சங்கத்தினா் கொண்டாடினா்.

மேலூா் பேருந்து நிலையம் முன்பாக பென்னி குவிக் உருவப் படத்தை வைத்து மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதில், வா்த்தா்கள் சங்கச் செயலா் முத்துக்கிருஷ்ணன், மேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ரகுபதிராஜா, காவல் ஆய்வாளா் சாா்லஸ், மேலூா் ஒருபோக பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் மீ. முருகன், வழக்குரைஞா் அசோக்குமாா், அரிமா சங்கம் மணிவாசகம் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.