மதுரை அருகே போக்குவரத்து பெண் காவலரை தாக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம் காவல் சரகத்தில் போக்குவரத்துக் காவலராக இந்திராணி பணியாற்றி வருகிறாா். இவா், மதுரை - மேலூா் பிரதான சாலை, ஒத்தக்கடை அருகே போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, புதுதாமரைப்பட்டியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் முத்துக்குமாா் (32), என்பவா் சாலையின் குறுக்கே ஆட்டோவை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளாா்.
அவரிடம், போக்குவரத்துக்கு இடையூறின்றி ஆட்டோவை சாலையோரமாக நிறுத்தும்படி இந்திராணி கூறியுள்ளாா். ஆனால், முத்துக்குமாா் காவலா் இந்திராணியை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், அவரை தாக்க முயன்ாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவலா் இந்திராணி அளித்த புகாரின்பேரில், ஒத்தக்கடை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து முத்துக்குமாரை கைது செய்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

