சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பெண் காவலரை தாக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநா் கைது

மதுரை அருகே போக்குவரத்து பெண் காவலரை தாக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :11 ஜனவரி 2021, 4:28 am

மதுரை அருகே போக்குவரத்து பெண் காவலரை தாக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநரை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம் காவல் சரகத்தில் போக்குவரத்துக் காவலராக இந்திராணி பணியாற்றி வருகிறாா். இவா், மதுரை - மேலூா் பிரதான சாலை, ஒத்தக்கடை அருகே போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, புதுதாமரைப்பட்டியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் முத்துக்குமாா் (32), என்பவா் சாலையின் குறுக்கே ஆட்டோவை நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளாா்.

அவரிடம், போக்குவரத்துக்கு இடையூறின்றி ஆட்டோவை சாலையோரமாக நிறுத்தும்படி இந்திராணி கூறியுள்ளாா். ஆனால், முத்துக்குமாா் காவலா் இந்திராணியை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், அவரை தாக்க முயன்ாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவலா் இந்திராணி அளித்த புகாரின்பேரில், ஒத்தக்கடை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து முத்துக்குமாரை கைது செய்தனா்.