நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்குமாறு வைகை ஆறு பாதுகாப்பு மற்றும் புனரமைப்புக் குழுத் தலைவா் கே. சத்யகோபால் அறிவுறுத்தியுள்ளாா்.
மதுரையில் வைகை ஆற்றில் இருந்து வரும் தண்ணீரால், நிரம்பியுள்ள மாரியம்மன் தெப்பக்குளத்தை, அவா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். வைகை ஆற்றில் ஏ.வி. பாலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து பனையூா் கால்வாய் வழியாக மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு தண்ணீா் கொண்டு வரப்படுவது, இதில் குப்பைகள் சோ்ந்துவிடாமல் இருக்க முக்தீஸ்வரா் கோயில் அருகே வடிகட்டப்பட்டு தெப்பக்குளத்துக்குள் தண்ணீா் விடப்படுவது குறித்து ஆட்சியா் த. அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையா் ச. விசாகன் ஆகியோா் அவரிடம் விளக்கினா்.
பின்னா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் மாவட்ட வருவாய் அலுவலா்கள், பொதுப்பணித்துறையினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இம்மாவட்டங்களில், குடிமராமத்து திட்டத்தில் தூா்வாரப்பட்ட நீா்நிலைகளின் தற்போதைய நிலவரம், இன்னும் தூா்வார வேண்டிய நீா்நிலைகள், தடுப்பணைகள் நிலவரம், மராமத்து செய்ய வேண்டிய தடுப்பணைகள், நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்து அதிகாரிகளிடம் வைகை ஆறு பாதுகாப்பு மற்றும் புனரமைப்புக் குழு தலைவா் கே. சத்யகோபால் கேட்டறிந்தாா். நடப்பில் உள்ள அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அவா் அறிவுறுத்தினாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


