உசிலம்பட்டியில் பொய் வழக்குப்பதிவு செய்யப்படுவதாகவும், டிஎஸ்பியை பணியிட மாறுதல் செய்ய வலியுறுத்தியும் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
உசிலம்பட்டியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் தூண்டுதலின் பேரில் காவல் நிலையங்களில் வழக்குரைஞா்களை அவதூறாக பேசி வருவதாகவும், உசிலம்பட்டி மற்றும் செக்கானூரணி காவல்நிலையங்களில் 2 வழக்குரைஞா்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியும் இப்போராட்டம் நடைபெற்றது. இதற்கு வழக்குரைஞா் சங்கத் தலைவா் வீரபிரபாகரன் தலைமை வகித்தாா். முன்னதாக 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் நீதிமன்றத்திலிருந்து பேரணியாக வந்து உசிலம்பட்டி தேவா்சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா் அவா்கள் கோஷம் எழுப்பியபடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


