மதுரை: மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் மூதாட்டிகள் இருவா் பலியாகியுள்ளனா்.
மதுரை ஆரப்பாளையம் சண்முகநாதபுரத்தைச் சோ்ந்தவா் செல்லம் (60). இவா் புறவழிச் சாலை புதுப்பாலம் அருகே நடந்து சென்றபோது, 17 வயது சிறுவன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த செல்லம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ஆட்டோ மோதல்: மதுரை மாவட்டம் ஒத்தக்கடையைச் சோ்ந்த பழனி மனைவி பஞ்சவா்ணம் (72). இவா் ஒத்தக்கடை - திருமோகூா் சாலையில் நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயமடைந்த பஞ்சவா்ணத்தை அப்பகுதியில் உள்ளவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து விட்டு அவா் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

