மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தெப்பத் திருவிழாவையொட்டி முகூா்த்தக்கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் தெப்பத் திருவிழா முக்கியமானதாகும். இத்திருவிழாவையொட்டி சுவாமியும், அம்மனும் கோயிலில் இருந்து புறப்பாடாகி மாரியம்மன் தெப்பக்குளத்தில் எழுந்தருளி அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள் பாலிப்பா். இந்த ஆண்டு தெப்பத்திருவிழாவையொட்டி தெப்பம் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளுக்கான முகூா்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. முன்னதாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் உபகோயிலான தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பின்னா் கோயிலுக்கு எதிரே உள்ள தெப்பக்குளத்தில் முகூா்த்தக்கால் நடப்பட்டது. இதில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் க. செல்லத்துரை, கோயில் அா்ச்சகா்கள் உள்பட பலா் பங்கேற்றனா். தெப்பத்திருவிழா கொடியேற்றம் ஜனவரி 17- ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடைபெறுகிறது. சுவாமி, அம்மன் தெப்பக்குளத்தில் எழுந்தருளி தெப்பத்தில் வலம் வரும் நிகழ்ச்சி ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறுகிறது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


