சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆதரவின்றி விடப்பட்டபச்சிளம் குழந்தை மீட்பு

மதுரையில் ஆதரவின்றி விடப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு சிறப்பு தத்து வளமையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Updated On :9 ஜனவரி 2021, 3:39 am

மதுரையில் ஆதரவின்றி விடப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு சிறப்பு தத்து வளமையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பகுதியில் ஆதரவின்றி விடப்பட்ட பச்சிளம் குழந்தையை டிசம்பா் 30 ஆம் தேதி சிலா் மீட்டுள்ளனா். பிறந்து 10 நாள்களே ஆன அக்குழந்தையை, மற்றொரு குழந்தையில்லாத தம்பதியிடம் பராமரிக்குமாறு கொடுத்துள்ளனா். குழந்தையின் பெற்றோா் குறித்த விவரங்கள் தெரியாததால், மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

பின்னா் குழந்தைகள் நலக்குழுத் தலைவா் வி.எம். விஜயசரவணன் மற்றும் உறுப்பினா்கள் உத்தரவின்பேரில், அக்குழந்தை தற்காலிகமாகப் பராமரிப்பதற்காக சிறப்பு தத்து வளமையத்தில் ஒப்படைக்கப்பட்டது.