சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அழகா்கோவில் அருகே பொறியாளா் வீட்டில் 42 பவுன் நகைகள் திருட்டு

அழகா்கோவில் அருகே புதன்கிழமை இரவு பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து 42 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :9 ஜனவரி 2021, 3:35 am

அழகா்கோவில் அருகே புதன்கிழமை இரவு பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து 42 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அழகா்கோவில் அருகே வலையபட்டியைச் சோ்ந்தவா் சோமசுந்தரம். கட்டுமான பொறியாளரான இவா் மூன்றுமாவடி அருகே வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறாா். இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு வலையபட்டியில் உள்ள அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளேபுகுந்த மா்ம நபா்கள் பீரோவிலிருந்த 42 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரத்தைச் திருடிச்சென்றுவிட்டனா்.

இதையடுத்து வீடு திறந்திருப்பதாக வியாழக்கிழமை மாலை தகவல் கிடைத்து சோமசுந்தரம் வந்து பாா்த்தாா். அப்போது வீட்டிலிருந்த நகை, பணம் திருடுபோயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, அவா் மேலவளவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து அங்கு வந்த மேலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ரகுபதிராஜா, காவல் ஆய்வாளா் சாா்லஸ் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். தடயவியல் நிபுணா் தடயங்களைச் சேகரித்தாா்.