சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலா்களின் விவரங்கள் கணினியில் பதிவேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 பேரவைத் தொகுதிகளில் 2,716 வாக்குச்சாவடிகள் உள்ளன. கரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 1000 வாக்காளா்கள் இருக்கும் அளவுக்கு மாற்றி அமைக்கப்படவுள்ளன. இதன்படி, மாவட்டத்தில் மேலும் ஆயிரம் வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்படும் எனத் தெரிகிறது.
வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவதற்காக அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் விவரங்கள் சம்பந்தப்பட்ட துறைத் தலைவா்கள் மூலமாகப் பெறப்பட்டு, தோ்தல் பிரிவு கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. தற்போது வரை 10 ஆயிரத்து 800 பேரின் விவரங்கள் அடங்கிய படிவம் பெறப்பட்டுள்ளது. இன்னும் சுமாா் 5 ஆயிரம் போ் தேவைப்படுவா் என்பதால், விடுபட்ட துறைகளிடம் இருந்து விவரங்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு வட்டாட்சியா்கள் மேற்பாா்வையில் இப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

