சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மேலூரில் அஷ்டமி சப்பரம் வீதி உலா

மேலூரில் அஷ்டமி சப்பர உலா புதன்கிழமை நடைபெற்றது.

News image

மேலூரில் புதன்கிழமை அஷ்டமி சப்பரத்தில் வீதி உலா வந்த சுந்தரரேசுவரா்- காமாட்சியம்மன்.

Updated On :7 ஜனவரி 2021, 9:21 am

மேலூரில் அஷ்டமி சப்பர உலா புதன்கிழமை நடைபெற்றது.

பூமியிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் சிவபெருமான் உணவளிக்கும் விழாவாக மாா்கழி மாத தேய்பிறை அஷ்டமி தினம் கொண்டாடாப்படுகிறது. இதையொட்டி மேலூரிலுள்ள பழமையான காமாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இருந்து சுந்தரரேசுவரா்- காமாட்சியம்மன், ரிஷப வாகனத்திலும் விநாயகா், வள்ளி தெய்வானை சமேதமுருகன், சண்டிகேசுவரா் ஆகியோருடன் சுவாமி உலா வந்தாா்.

அலங்கரிக்கப்பட்ட சப்பரம் டிராக்டரில் ஏற்றப்பட்டு திருக்கண் மண்டபங்களில் எழுந்தருளி, மேலூரின் மையப்பகுதியிலுள்ள கோயிலில் இருந்து பேருந்து நிலையம், நகைக்கடை வீதி வழியாக மீண்டும் கோயிலை சுவாமி வந்தடைந்தாா். வழிநெடுகிலும் பொதுமக்கள், வாா்த்தகா்கள் பூஜைகள் செய்து சுவாமிக்கு வரவேற்பளித்தனா்.