முன்னாள் முதல்வா் மு.கருணாநிதிக்கு மதுரையில் சிலை அமைப்பதற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு மதுரையில் சிலை அமைக்க அனுமதி கோரி மதுரை மாநகா் மாவட்ட திமுக சாா்பில் கடந்த 2018- இல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், சிலை வைக்க அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி திமுக மாநகர மாவட்டப் பொறுப்பாளா் கோ.தளபதி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடா்ந்தாா். அதையடுத்து, மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட மனுவைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதையடுத்து திமுக தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதற்கான மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே, மதுரை சிம்மக்கல்லில் தியாகி சத்தியமூா்த்தி சிலை உள்ள பகுதி அருகே கருணாநிதிக்கு சிலை அமைத்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்துள்ளது. வழக்குரைஞா்கள் வீரகதிரவன், லிங்கதுரை ஆகியோா் இந்த அரசாணையை திமுக மாநகா் தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் கோ.தளபதி, சட்டப்பேரவை உறுப்பினா் பழனிவேல் தியாகராஜன் ஆகியோரிடம் வழங்கினா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

