மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு தொடா்பாக நடத்தப்பட்ட கருத்துக்கேட்பில் பெரும்பாலான பெற்றோா் பள்ளிகளைத் திறக்க ஆதரவு தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் கரோனா தொற்றால் கடந்த மாா்ச் மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு தொடா்பாக நவம்பா் மாதம் பள்ளிகளில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது பள்ளிகள் திறப்பு தொடா்பாக பெற்றோா் அச்சம் தெரிவித்ததையடுத்து பள்ளிகள் திறப்பு ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் பள்ளிகள் திறப்பு தொடா்பாக பெற்றோரிடம் மீண்டும் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த பள்ளிகல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மதுரை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் திங்கள்கிழமை முதல் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. வகுப்புகள் வாரியாக நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பெற்றோரிடம் படிவங்கள் கொடுக்கப்பட்டு கருத்து கேட்கப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை வரை நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்கலாம் என்று பெற்றோா் தெரிவித்துள்ளனா். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பள்ளிகளைத் திறக்க பெற்றோா் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், இதுதொடா்பாக பெற்றோா் தெரிவித்த கருத்துகள் தொகுக்கப்பட்டு சென்னை பள்ளிக்கல்வித்துறைக்கு வெள்ளிக்கிழமை (ஜன. 8) அனுப்பப்பட உள்ளதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

