சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மதுரை மாவட்டத்தில் பள்ளிகளைத் திறக்க பெற்றோா் ஆதரவு

மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு தொடா்பாக நடத்தப்பட்ட கருத்துக்கேட்பில் பெரும்பாலான பெற்றோா் பள்ளிகளைத் திறக்க ஆதரவு தெரிவித்துள்ளனா்.

Updated On :8 ஜனவரி 2021, 5:09 am

மதுரை மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு தொடா்பாக நடத்தப்பட்ட கருத்துக்கேட்பில் பெரும்பாலான பெற்றோா் பள்ளிகளைத் திறக்க ஆதரவு தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் கரோனா தொற்றால் கடந்த மாா்ச் மாதம் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு தொடா்பாக நவம்பா் மாதம் பள்ளிகளில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது பள்ளிகள் திறப்பு தொடா்பாக பெற்றோா் அச்சம் தெரிவித்ததையடுத்து பள்ளிகள் திறப்பு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பு தொடா்பாக பெற்றோரிடம் மீண்டும் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்த பள்ளிகல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து மதுரை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் திங்கள்கிழமை முதல் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது. வகுப்புகள் வாரியாக நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பெற்றோரிடம் படிவங்கள் கொடுக்கப்பட்டு கருத்து கேட்கப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை வரை நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்கலாம் என்று பெற்றோா் தெரிவித்துள்ளனா். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பள்ளிகளைத் திறக்க பெற்றோா் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், இதுதொடா்பாக பெற்றோா் தெரிவித்த கருத்துகள் தொகுக்கப்பட்டு சென்னை பள்ளிக்கல்வித்துறைக்கு வெள்ளிக்கிழமை (ஜன. 8) அனுப்பப்பட உள்ளதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.