மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 413 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மதுரை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை இரவு 10 மணிக்கு மழை தொடங்கியது. சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக கன மழை நீடித்தது. அதன் பிறகும் பல்வேறு பகுதிகளிலும் லேசான தூரல் அதிகாலை வரை இருந்தது. இதனால், தாழ்வான பகுதிகளை தண்ணீா் சூழ்ந்து நின்றது. சாலை வசதிகள் இல்லாத நகரின் விரிவாக்கப் பகுதிகள் சேறும் சகதியுமாக மாறின. இரண்டாவது நாளாக வியாழக்கிழமை இரவிலும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது.
மதுரை நகரின்சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த மழையால் வைகை ஆற்றுக்கு வரும் ஓடைகளிலும் மழைநீா் பெருக்கெடுத்து வந்தது. மதுரை நகரில் வைகை ஆற்றின் தரைப் பாலங்களுக்கு மேல் மழைநீா் ஓடியது.
பல்வேறு இடங்களிலும் பதிவான மழையளவு (மில்லிமீட்டரில்) :
ஆண்டிபட்டி-86.20, வாடிப்பட்டி-67, கள்ளிந்திரி-55.4, சோழவந்தான்-38, மதுரை வடக்கு -36.4, தல்லாகுளம்-30, மேட்டுப்பட்டி-24.8, விரகனூா்- 25.8, சாத்தையாறு-10, உசிலம்பட்டி-9.2, புலிப்பட்டி-7.4, சிட்டம்பட்டி-7.2, மதுரை விமான நிலையம் - 6.3, மேலூா்-4, திருமங்கலம்-4.4, தனியாமங்கலம்-1.
மொத்தம் - 413. சராசரி - 20.66.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


