மதுரை அருகே சட்டவிரோதமாக சீட்டு விளையாடிய 42 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து ரூ.3.27 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் உள்ள தனியாா் கிளப்பில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை நடத்தினா். அப்போது, கிளப்பில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த நாகேஸ்வரராவ் (72), சிவக்குமாா்(20), ஜாபா்(40), பாட்சா(55), சாா்லஸ்(35), ஆரோக்கியம்(41) உள்பட 42 போ் சட்டவிரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாடியது தெரியவந்தது. இதுகுறித்து காவல் ஆய்வாளா் ஆனந்ததாண்டவம் அளித்த புகாரின் பேரில் ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப்பதிந்து 42 பேரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.3.27 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

