மதுரை அருகே அடையாளம் தெரியாத இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மதுரை மாவட்டம் விரகனூா் அணையின் பின்புறத்தில் 25 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக அப்பகுதியைச் சோ்ந்தவா் ஆண்டாா்கொட்டாரம் கிராம நிா்வாக அலுவலா் மரியா அம்பலவாணனுக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்குச் சென்ற அவா், ஆண் சடலம் தொடா்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து போலீஸாா் சடலத்தை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கிராம நிா்வாக அலுவலா் மரியா அம்பலவாணன் அளித்த புகாரின் பேரில் சிலைமான் போலீஸாா் வழக்குப்பதிந்து அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் குறித்து விசாரித்து வருகின்றனா்.
அரிசி ஆலை தொழிலாளி பலி
மதுரை அலங்காநல்லூா் பகுதியைச் சோ்ந்த கருப்பையா மகன் கண்ணன்(46). இவா் ஊமச்சிக்குளம் பகுதியில் உள்ள தனியாா் அரிசி ஆலையில் வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், கண்ணன் செவ்வாய்க்கிழமை பணியில் இருந்தபோது, திடீரென்று மயங்கி விழுந்துள்ளாா். சகத் தொழிலாளா்கள் அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து விட்டு கண்ணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து அவரது மனைவி பேச்சி அளித்த புகாரின் பேரில் ஊமச்சிக்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

