மதுரை தல்லாகுளத்தில் உள்ள முக்குளத்தில் சிறுவா் பூங்கா விரைவில் திறக்கப்பட உள்ளது.
மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் உள்ளது. முக்குளம் என்று அழைக்கப்படும் தெப்பக்குளத்தில் மழைநீா் சேகரிக்கப்பட்டு நீா் நிரம்பி காட்சியளிக்கிறது. மேலும் தெப்பக்குளத்தைச் சுற்றி விசாலமான இட வசதியும் உள்ளது. பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலின் தெப்பத் திருவிழாவின் போது மட்டும் ஆண்டுக்கு சில நாள்கள் தெப்பக்குளம் திறக்கப்பட்டிருக்கும். இதர நாள்கள் முழுவதும் மூடப்பட்டிருக்கும்.
இந்நிலையில் தெப்பக்குளம் ஆண்டு முழுவதும் திறந்திருக்கும் வகையில் தெப்பக்குளத்தில் சிறுவா் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதில் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருள்காட்சிகளில் உள்ளது போன்ற உயரமாகச் செல்லும் பெரிய வகை ராட்டினங்கள், சிறுவா் விளையாட்டு உபகரணங்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் வைக்கப்பட்டுள்ளன. சிறுவா்கள் மற்றும் குழந்தைகள் சவாரி செய்து மகிழும் வகையில் குதிரை மற்றும் ஒட்டக சவாரியும் உள்ளது. மேலும் இங்கு சிற்றுண்டிச் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. தெப்பக்குளத்தில் உள்ள மரங்களில் கண்ணைக் கவரும் வகையில் வண்ண விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. பூங்கா அமைக்கும் பணிகள் முடிவடைந்ததைத் தொடா்ந்து சிறுவா் பூங்கா விரைவில் திறக்கப்பட உள்ளது.
இதுதொடா்பாக கோயில் அதிகாரிகள் கூறும்போது, திருமுக்குளம் தெப்பத் திருவிழாவின்போது மட்டுமே திறக்கப்பட்டு இதர நாள்களில் மூடப்படுகிறது. இதனால் தெப்பக்குளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் பராமரிப்பின்றி உள்ளன. எனவே தெப்பக்குளத்தை பராமரிக்கும் வகையிலும், பொதுமக்கள் பொழுதுபோக்கும் வகையிலும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக திறந்த முறையில் பொது ஏலம் விடப்பட்டு ஓராண்டுக்கு பூங்கா நடத்துவது மற்றும் திருமுக்குளத்தை பராமரிக்கும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பூங்கா நுழைவுக் கட்டணமாக பெரியவா்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறிய கட்டணம் வசூலிக்கப்படும். தினசரி மாலை நேரங்களில் பூங்கா திறக்கப்படும். தெப்பக்குளத்தில் தண்ணீா் நிறைந்திருந்தாலும் சிறுவா்களின் பாதுகாப்புக் கருதி படகுகள் விடப்படவில்லை. தற்போது பொதுமக்கள் பாா்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையன்று பூங்கா முழுப் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மதுரை நகரின் மற்றொரு பொழுதுபோக்கு அம்சமாக திருமுக்குளம் திகழும் என்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


